சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
இரவில் வீடுகளில் தேடல்களை நடத்த முடியாது - 92 ற்கு மேற்பட்ட  தமிழர்களுக்காக | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
நிறைவு பெற்றவை

இரவில் வீடுகளில் தேடல்களை நடத்த முடியாது - 92 ற்கு மேற்பட்ட தமிழர்களுக்காக | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்

DescriptionDetails & specsAttachments
பிரச்சனையும் பின்னணியும்:

2007, இக்காலப்பகுதியில் கொழும்பு மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட 92 தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மருதானாவில் பொலிசார் அவர்களின் காவல் எல்லையில் வசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் தற்காலிக குடியிருப்பு விசாக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் முகத்துவாரம் பொலிசார் தங்கள் பகுதியிலுள்ள தமிழர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.


சுமந்திரனின் நடவடிக்கை:

தமிழர்களை பெருமளவில் கைது செய்வதை எதிர்த்து சுமந்திரன் ஆஜாராகி (சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக), இவ்வாறன பொலிசாரின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கேள்வி எழுப்பினார். சுமந்திரன் எழுப்பிய விடயம் தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித சில்வாவிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, ​​சொலிசிட்டர் ஜெனரலுக்கு இந்த நடைமுறை பற்றி தெரியாது எனவும், சொலிசிட்டர் ஜெனரலின் ஆலோசனையின்றி புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதாகவும் பதிலளித்தார். காவல்துறையினரின் நடத்தை அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று சுமந்திரன் விவாதித்தார்.

இவ் வழக்கில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.டபிள்யூ.டி.தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர்.

இவ்வாறான வழக்குகளில் இலவசமாக ஈடுபட்டிருந்த சுமந்திரன் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு, "கருப்பு அங்கி அணிந்த துரோகி" என்று முத்திரை குத்தப்பட்டார்.


விளைவு:

இந்த சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து விசாரிக்க, சொலிசிட்டர் ஜெனரலின் பிரதிநிதி மற்றும் நீதி அமைச்சகத்தின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க நீதிபதிகள் குழு முன்மொழிந்தது.

விசாரணை ஆணைக்குழு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய காரணங்கள் உள்ளவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றவர்களை மேலும் தாமதமின்றி விடுவிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.


பயன்:

இதன் பலனாக, இரவில் வீடுகளில் தேடல்களை நடத்த முடியாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கைதுகள் தொடர்பாக பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டன. மற்றும் இந்த வழக்கின் விளைவாக பிணை உட்பட பல்வேறு நிபந்தனைகளின் பேரில் கைதிகளை விடுவிக்கத் தொடங்கியது.