சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
34 வருடங்களின் பின்னர் அச்சுவேலி-வசாவிளான் பாதை விடுவிப்பு | 01/11/2024
நிலுவையில் உள்ளவை

34 வருடங்களின் பின்னர் அச்சுவேலி-வசாவிளான் பாதை விடுவிப்பு | 01/11/2024

DescriptionDetails & specsAttachments
34 வருடங்களின் பின்னர் இன்று காலை 6 மணிக்கு பொது மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்ட அச்சுவேலி-வசாவிளான் பாதையை மக்களோடு சென்று பார்வையிட்டார் எம். ஏ. சுமந்திரன்.

கொழும்பில் எப்படிச் சில பாதைகள் அண்மையில் திறக்கப்பட்டதோ, அதே போன்று நீண்ட நாட்களாக மூடப்பட்டு மக்களுக்கு சிரமத்தை உண்டுபண்ணி வரும் அச்சுவேலி-வசாவிளான் பாதையும் திறக்கப்பட வேண்டுமென்று சென்ற ஞாயிற்றுக் கிழமை (27/10/2024) சுமந்திரன் ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

https://vayankal.com/sumanthiranin_panikal/kaanni-miittppu